முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சுந்தர் பிச்சையின் கரப்பான் பூச்சி கோட்பாடு

சுந்தர் பிச்சையின்  கரப்பான் பூச்சி கோட்பாடு ஒரு உணவகத்தில் கரப்பான் பூச்சி ஒன்று எங்கிருந்தோ பறந்து வந்து ஒரு பெண் மீது அமர்ந்து கொண்டது. உடனே அந்த பெண் பயத்தால் கூச்சலிட ஆரம்பித்தார். மிகவும் கஷ்டப்பட்டு அவர் அந்த கரப்பானை அவர் மீதிருந்து விலக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். அது வரை அமைதியாக இருந்த அவருடன் வந்தவர்களுக்கும் இப்பொழுது அந்த பதற்றம் பற்றிக்கொண்டது. மிகவும் கஷ்டப்பட்டு அவர் அந்த கரப்பானை தன் மீதிருந்து விளக்கி விட்டார். ஆனால் அந்த கரப்பான் இப்பொழுது வேறொரு பெண் மீது சென்று அமர்ந்து கொண்டது. இப்பொழுது இந்த பெண் அதே போல் கூச்சலிட ஆரம்பித்தார். அமைதியாக இருந்த மொத்த உணவகமும் இப்பொழுது அமைதியிழந்து காணப்பட்டது. இதை பார்த்துக் கொண்டிருந்த பணியாளர் சூழ்நிலையை சரி செய்ய விரைந்தார். இந்த முறை கரப்பான் பறந்து சென்று அந்த பணியாளர் மீது அமர்ந்து கொண்டது. பணியாளர் தன்னை நிதானித்துக் கொண்டு தன் சட்டையின் மீது அமர்ந்திருக்கும் கரப்பானின் நடத்தையை கவனித்தார். அது தன் நகர்தலை நிறுத்தியதும், தன் விரல்களால் அதை பிடித்து உணவகத்திற்கு வெளியே வீசியெறிந்தார். நான் என் காபியை பருகி கொண...
சமீபத்திய இடுகைகள்

இரவில் தூங்கும்போது திடீரென்று பள்ளத்தில் விழுவது அல்லது உயரமான இடத்தில் இருந்து விழுவது போன்ற கனவுகள் - காரணம்

இரவில் தூங்கும்போது திடீரென்று பள்ளத்தில் விழுவது அல்லது உயரமான இடத்தில் இருந்து விழுவது போன்ற கனவுகள்:  அப்படி கீழே விழும் போது தரையில் அடிப்பதற்கு முன்பு நீங்கள் எழுந்திருக்காவிட்டால் நீங்கள் இறந்து விடுவீர்கள் என சிலர் (சில கிறாமபுற மக்கள்) எண்ணுகிறார்கள். ஆனால்  உண்மையில் இறக்க மாட்டீர்கள், அது வெறும் கனவு மட்டும்தான்.  உயரத்தில் இருந்து கீழே விழுவது போன்ற கனவுகள்  மிகவும் பொதுவான கனவுகளில் ஒன்றாகும். இந்த வகை கணவுகளுக்கான அர்த்தம்  என்பது பாதுகாப்பின்மை, உறுதியற்ற தன்மை மற்றும் கவலைகளின் அறிகுறியாக இருக்கலாம். உங்கள் உறவுகளில் (Relationship) அல்லது வேலை செய்யும் இடங்களில் உங்கள் மனநிலையை பொறுத்து இந்த வகை கனவுகள் வரும்.  இது போன்ற கனவுகள் பெரும்பாலும் சில சூழ்நிலை அல்லது சந்தர்ப்பத்தில் உங்கள் தோல்வி அல்லது தாழ்வு மனப்பான்மையை பிரதிபலிக்கலாம் .  உங்கள் வேலை / பள்ளியில் தோல்வி, மரியாதை  இழத்தல் அல்லது காதலில் தோல்வி போன்றவை  ஏற்பட்டு விடுமோ என்ற பயமாகவும் இருக்கலாம். மன நலத்தை  புரிந்துகொள்வதற்கு கனவுகள் முக்கியம் என்று சிக்மண்ட் பிர...

திரிகூடராசப்பக் கவிராயர்

திரிகூடராசப்பக் கவிராயர் திருக்குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர் திரிகூடராசப்பர் அல்லது திரிகூடராசப்பக் கவிராயர் என்பவர் திருக்குற்றாலக் குறவஞ்சி என்ற இசை நாடகத்தின் ஆசிரியர் ஆவார். தோற்றம்:- திரிகூடராசப்பர் திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசியை அடுத்துள்ள மேலகரம் என்னும் ஊரில் ஏறக்குறைய 18 ஆம் நூற்றாண்டில் பிறந்தவராவார். இளமை:- இவர் தம் இளம் பருவத்திலேயே தமிழ்க்கல்வி பயின்று அதில் நன்கு தேர்ச்சி பெற்றார்; செய்யுள் இயற்றும் திறனும் கைவரப் பெற்றார்; அவற்றுள், மடக்கு திரிபு சிலேடை முதலிய சொல்லணிகளும், உவமை முதலிய பொருளணிகளும் சிறப்பப் பாடுதலில் வல்லுநர். விரைந்து பாடும் பேராற்றலும் கொண்டவர். திருக்குற்றாலத்தில் எழுந்தருளியிருக்கின்ற திருக்குற்றால நாதராகிய திரிகூடராசப் பெருமான் மீது பதினான்கு நூல்கள் பாடினார். திரிகூடராசப்பக் கவிராயர் படைத்த நூல்கள்:- 1. திருக்குற்றாலக் குறவஞ்சி 2. திருக்குற்றலத் தலபுராணம் 3. திருக்குற்றால மாலை 4. திருக்குற்றாலச் சிலேடை வெண்பா 5. திருக்குற்றால யமக அந்தாதி 6. திருக்குற்றால நாதர் உலா 7. திருக்குற்றால ஊடல் 8. திருக்குற்றாலப் பரம்பொருள்...

குற்றால குறவஞ்சி - குறத்தி மலைவளங்கூறுதல்

திருக்குற்றாலக் குறவஞ்சி thirukutrala kuravanji malai valam குற்றால குறவஞ்சி வானரங்கள்... (1) வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்    மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும் கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பார்    கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார் தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்    செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும் கூனலிளம் பிறைமுடித்த வேணிஅலங் காரர்    குற்றாலத்திரிகூட மலைஎங்கள் மலையே; பாடல் பொருள் : ஆண் குரங்குகள் பல்வகைப் பழங்களைப் பறித்துக் கொடுத்துப் பெண் குரங்குகளோடு தழுவும்; அக் குரங்குகளால் சிதறியெறியப்படுகின்ற பழங்களை வானுலகத்தில் வாழும் தேவர்கள் இரந்து இரந்துவேண்டிக் கேட்பார்கள், வனவேடர்கள் தம் கண்களால் ஏறெடுத்துப்)பார்த்து உற்று நோக்கித் தேவர்களை அழைப்பார்கள்; வானின் வழியாகச் செல்கின்ற சித்தர்கள் கீழிறங்கி வந்து காயசித்தி மருந்துகளாகிய வன மூலிகைகளை வளர்ப்பார்கள்; தேன் கலந்த மலையருவியினது அலைகள் மேலெழுந்து வானத்தினின்றும் வழிந்து ஓடும்; அதனால் செந்நிற ஞாயிற்றின் தே...

உங்களுக்கு சூட்டு உடம்பா ? கண்டிப்பா இதை படிங்க .

உடல் சூட்டை குறைக்க எளிய வழிகள்:  உடல் சூட்டை குறைக்க எளிய வழிகள் ( முக்கியமாக சூட்டு உடம்பு உள்ளவர்களுக்கு ) தினமும் இரண்டு அல்லது மூன்று முறை (சூழ்நிலைக்கு ஏற்ப) குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். அவ்வபோது முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். மர நாற்காலி, பிரம்பு நாற்காலி அல்லது பிளாஸ்டிக் நாற்காலி, தோல் ஷோபா போன்றவை நல்லது . வெல்வெட்டு ஷோபா, ரெகஸீன் ஷோபா, நாற்காலி போன்றவற்றை பயன்படுத்த கூடாது. பேருந்து பயணத்தின் போது வெல்வெட்டு துணி போட்ட இருக்கியாயில் அமர்ந்து பயணம் செய்யுமபடியான பேருந்தை தவிர்த்து அரசு பேருந்தையே பயணபடுத்தலாம். கணினி கைபேசி, தொலைக்காட்சி போன்றவற்றை அதிகம் பயன்படுத்துவதை தவிற்க வேண்டும், படுக்கும் முறை : மெத்தையில் படுக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பாயில் படுக்க வேண்டாம். கோறை பாய் படுப்பதற்கு மிகவும் நல்லது. மொட்டை மாடியில் படுக்கும் முன்பு நன்றாக நீர் தெளித்து பின் படுக்க வேண்டும். குளிர்சாதன அறையை தவிற்க வேண்டும். அல்லது AC-ஐ 22 - 27 டிக்கிரிக்குள் பயன்படுத்த வேண்டும். polyester போர்வை பயன்படுத்த கூடாது. பர...

தீதும் நன்றும் பிறர் தர வாரா !

யாதும் ஊரே, யாவரும் கேளிர் புறநானூறு - 192 யாதும் ஊரே, யாவரும் கேளிர்; தீதும், நன்றும், பிறர் தர வாரா; நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன; சாதலும் புதுவது அன்றே! வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின் இன்னாது என்றலும் இலமே! மின்னொடு வானம் தண் துளி தலைஇ ஆனாது, கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே! -கணியன் பூங்குன்றனார் பொருள் எல்லா ஊரும் எம் ஊர் எல்லா மக்களும் எம் உறவினரே நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை சாதல் புதுமை யில்லை; வாழ்தல் இன்பமென்று மகிழ்ந்தது இல்லை வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம் ஆதலினால்,பிறந்து வாழ்வோரில் சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.