முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரவில் தூங்கும்போது திடீரென்று பள்ளத்தில் விழுவது அல்லது உயரமான இடத்தில் இருந்து விழுவது போன்ற கனவுகள் - காரணம்



இரவில் தூங்கும்போது திடீரென்று பள்ளத்தில் விழுவது அல்லது உயரமான இடத்தில் இருந்து விழுவது போன்ற கனவுகள்: 

அப்படி கீழே விழும் போது தரையில் அடிப்பதற்கு முன்பு நீங்கள் எழுந்திருக்காவிட்டால் நீங்கள் இறந்து விடுவீர்கள் என சிலர் (சில கிறாமபுற மக்கள்) எண்ணுகிறார்கள். ஆனால்  உண்மையில் இறக்க மாட்டீர்கள், அது வெறும் கனவு மட்டும்தான். 

உயரத்தில் இருந்து கீழே விழுவது போன்ற கனவுகள்  மிகவும் பொதுவான கனவுகளில் ஒன்றாகும். இந்த வகை கணவுகளுக்கான அர்த்தம்  என்பது பாதுகாப்பின்மை, உறுதியற்ற தன்மை மற்றும் கவலைகளின் அறிகுறியாக இருக்கலாம்.

உங்கள் உறவுகளில் (Relationship) அல்லது வேலை செய்யும் இடங்களில் உங்கள் மனநிலையை பொறுத்து இந்த வகை கனவுகள் வரும். 

இது போன்ற கனவுகள் பெரும்பாலும் சில சூழ்நிலை அல்லது சந்தர்ப்பத்தில் உங்கள் தோல்வி அல்லது தாழ்வு மனப்பான்மையை பிரதிபலிக்கலாம் .

 உங்கள் வேலை / பள்ளியில் தோல்வி, மரியாதை  இழத்தல் அல்லது காதலில் தோல்வி போன்றவை  ஏற்பட்டு விடுமோ என்ற பயமாகவும் இருக்கலாம்.

மன நலத்தை  புரிந்துகொள்வதற்கு கனவுகள் முக்கியம் என்று சிக்மண்ட் பிராய்ட் நம்பினார். Sigmund Freud-இன் கருத்து படி இது போன்ற கனவுகள் நீங்கள் பாலியல் சார்ந்த சிந்தனையில் தூங்கும்போதும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.


(சிக்மண்ட் பிராய்ட் மனோ தத்துவத்தின் தந்தை ஆவார், மனதின் ஆழமான செயல்பாடுகளைப் புரிந்துகொள்வதற்காக கனவுகள் பற்றிய ஒரு புதிய துறையை உருவாக்கிய பெருமை இவரை சேரும். )

- இந்த வகை கனவுகள் பொதுவாக தூக்கத்தின் முதல் கட்டத்தில் நிகழ்கின்றன. அப்போது உங்கள் உடலில் வெட்டி இழுக்கும் அசைவுகள் (jerk) ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. (இது மிக சாதரணமே. இதன்பிறகு நல்ல தூக்கம் வரும். )

கிருத்துவ புனித நூல் (Bible) அடிப்படையில் இதுபோன்ற உயரத்தில் இருந்து விழுவது போன்ற கனவுகள் எதிர்மறை சிந்தனையை குறிப்பாவை.  

இது போன்ற கனவுகளை தவிர்க்க விரும்பினால், தூங்க போகும் முன்பு உங்கள் தசைகளை கொஞ்சம் தளர்வு செய்யும் சிறிய உடற்பயிற்சிகளை செய்துவிட்டு, படுக்கையில் அமர்ந்து நிதானமாக மூச்சை இழுத்து விட்டு பின்பு படுக்கலாம். இந்த சில நிமிட பயிற்சி உங்களுக்கு நல்ல தூக்கத்தை உறுதிபடுத்த உதவும். 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திரிகூடராசப்பக் கவிராயர்

திரிகூடராசப்பக் கவிராயர் திருக்குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர் திரிகூடராசப்பர் அல்லது திரிகூடராசப்பக் கவிராயர் என்பவர் திருக்குற்றாலக் குறவஞ்சி என்ற இசை நாடகத்தின் ஆசிரியர் ஆவார். தோற்றம்:- திரிகூடராசப்பர் திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசியை அடுத்துள்ள மேலகரம் என்னும் ஊரில் ஏறக்குறைய 18 ஆம் நூற்றாண்டில் பிறந்தவராவார். இளமை:- இவர் தம் இளம் பருவத்திலேயே தமிழ்க்கல்வி பயின்று அதில் நன்கு தேர்ச்சி பெற்றார்; செய்யுள் இயற்றும் திறனும் கைவரப் பெற்றார்; அவற்றுள், மடக்கு திரிபு சிலேடை முதலிய சொல்லணிகளும், உவமை முதலிய பொருளணிகளும் சிறப்பப் பாடுதலில் வல்லுநர். விரைந்து பாடும் பேராற்றலும் கொண்டவர். திருக்குற்றாலத்தில் எழுந்தருளியிருக்கின்ற திருக்குற்றால நாதராகிய திரிகூடராசப் பெருமான் மீது பதினான்கு நூல்கள் பாடினார். திரிகூடராசப்பக் கவிராயர் படைத்த நூல்கள்:- 1. திருக்குற்றாலக் குறவஞ்சி 2. திருக்குற்றலத் தலபுராணம் 3. திருக்குற்றால மாலை 4. திருக்குற்றாலச் சிலேடை வெண்பா 5. திருக்குற்றால யமக அந்தாதி 6. திருக்குற்றால நாதர் உலா 7. திருக்குற்றால ஊடல் 8. திருக்குற்றாலப் பரம்பொருள்...

தீதும் நன்றும் பிறர் தர வாரா !

யாதும் ஊரே, யாவரும் கேளிர் புறநானூறு - 192 யாதும் ஊரே, யாவரும் கேளிர்; தீதும், நன்றும், பிறர் தர வாரா; நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன; சாதலும் புதுவது அன்றே! வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின் இன்னாது என்றலும் இலமே! மின்னொடு வானம் தண் துளி தலைஇ ஆனாது, கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே! -கணியன் பூங்குன்றனார் பொருள் எல்லா ஊரும் எம் ஊர் எல்லா மக்களும் எம் உறவினரே நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை சாதல் புதுமை யில்லை; வாழ்தல் இன்பமென்று மகிழ்ந்தது இல்லை வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம் ஆதலினால்,பிறந்து வாழ்வோரில் சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.

குற்றால குறவஞ்சி - குறத்தி மலைவளங்கூறுதல்

திருக்குற்றாலக் குறவஞ்சி thirukutrala kuravanji malai valam குற்றால குறவஞ்சி வானரங்கள்... (1) வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்    மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும் கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பார்    கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார் தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்    செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும் கூனலிளம் பிறைமுடித்த வேணிஅலங் காரர்    குற்றாலத்திரிகூட மலைஎங்கள் மலையே; பாடல் பொருள் : ஆண் குரங்குகள் பல்வகைப் பழங்களைப் பறித்துக் கொடுத்துப் பெண் குரங்குகளோடு தழுவும்; அக் குரங்குகளால் சிதறியெறியப்படுகின்ற பழங்களை வானுலகத்தில் வாழும் தேவர்கள் இரந்து இரந்துவேண்டிக் கேட்பார்கள், வனவேடர்கள் தம் கண்களால் ஏறெடுத்துப்)பார்த்து உற்று நோக்கித் தேவர்களை அழைப்பார்கள்; வானின் வழியாகச் செல்கின்ற சித்தர்கள் கீழிறங்கி வந்து காயசித்தி மருந்துகளாகிய வன மூலிகைகளை வளர்ப்பார்கள்; தேன் கலந்த மலையருவியினது அலைகள் மேலெழுந்து வானத்தினின்றும் வழிந்து ஓடும்; அதனால் செந்நிற ஞாயிற்றின் தே...